Tuesday, November 11, 2008

மயக்கம் ஏற்படுவது எதனால்?

சாதாரணமாக ஒருவருக்கு மயக்கம் ஏற்படுகிறது என்றால், அதற்கு பல காரணங்கள் உள்ளன. மயக்கம் அல்லது கிறுகிறுப்பானது மூளையின் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது.
மயக்கம் மற்றும் கிறுகிறுப்பு ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது எனலாம்.
வழக்கமான சூழலில் இருந்து உங்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்றோ அல்லது தரையில் சாய்வது போன்றோ ஒருவிதமான பாதிப்பை இந்த கிறுகிறுப்பு ஏற்படுத்தலாம்.
தீவிரமான கிறுகிறுப்பே மயக்கம் எனலாம். பொதுவாக கிறுகிறுப்பு ஏற்பட்டவுடனேயே கேட்புத் திறன் குறையும். அதுபோன்ற ஒரு நிலையில், நம்மைச் சுற்றியுள்ள பொருட்களும், நாமும் சுற்றுவது போன்ற பிரமை உருவாகும். பார்வை மங்கலாகி, சில நேரங்களில் வாந்தி, மயக்கம் ஏற்படுவதுடன் தரையில் விழவும் நேரிடலாம்.
வேறு சிலருக்கு கண்கள் துடிக்கக்கூடும். இது சில மணிநேரம், சில நாட்கள் அல்லது சில வாரங்கள் வரைகூட நீடிக்கக்கூடும்.
நரம்பு மண்டலத்தில் இருந்து, உட்புறக்காதில் ஏற்படக்கூடிய பாதிப்பினாலேயே மயக்கம் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. உடலின் உணவு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, காதில் கேட்கும் திறனை பாதிப்படையச் செய்வதாலேயே இந்த நிலை உருவாகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
நரம்பு மண்டலப் பாதிப்புகளினாலேயே மயக்கம் ஏற்படக்கூடும் என்றாலும், கழுத்தில் அடிபடுதல், வலிப்பு உள்ளிட்ட காரணங்களினாலும் கிறுகிறுப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மூளைக் கட்டி, நியூரோமா எனப்படும் நரம்பு பாதிப்பினாலும் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
எந்த வகையில் மயக்கம் ஏற்பட்டாலும், அதற்குரிய சிகிச்சையை உங்களின் குடும்ப மருத்துவரின் உதவியுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற சரியான சிகிச்சையைப் பெறுதல் அவசியம். .

http://files.periyar.org.in/viduthalai/20081110/news18.html

குடல் புண்

நுண்கிருமி வயிற்றுப் புண் ணுக்கான முக்கிய காரணம். இது அசுத்த உணவு களால் பரவவது.

பொறாமை, விரக்தி, வெறுப்பு, குற்ற உணர்வு, தனிமை உணர்வு, ஆவேசம், பதட்டம் போன்ற உணர்வுகள் குடல் புண்ணை அதிகரிக்கின்றன.

மன அழுத்தத்தின்போது இரைப்பையில் அதிகமான அமிலம் சுரக்கிறது. அதனால் குடல்புண் பெரிதாகிறது அல்லது தாமதமாக குணமாகிறது.

குடல் புண்ணால் பாதிக்கப்படுபவர்களின் உற வினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இரண்டு மடங்கு கூடுதலாக குடல் புண்ணுக்கு ஆளாகிறார்கள்.

குடல்புண் ஒரு குண்டூசியின் தலை அளவிலிருந்து இரண்டரை செ.மீ. விட்டம் கொண்ட அளவு வரை தோன் றும். இவை பெரிதாக இருந்தால், இரைப் பையில் அடைப்பு ஏற்படும்பொழுது உணவு வயிற்றுக்குக் கீழே செல்லாது.

இப்புண் இரைப் பையை துளைத்தோ அல்லது முன்சிறுகடல் பகுதியைத் துளைத்தோ ஓட்டையை ஏற்படுத் தும். இதற்கு உடனே அறுவை சிகிச்சை தேவை.

குறிப்பாக தொடர்ந்து மது அருந்துவதோ, வலி மாத்திரை, மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை சாப் பிடுவோருக்கு இப்பிரச்சினை அதிகமாக ஏற்படும்.

வயிற்றுப்புண் சில சமயங்களில் புற்றுநோயாக மாறுவதுண்டு. இதைத் தொடக்கத்திலேயே கண் டறிந்து அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

அறிகுறிகள்:

நெஞ்சில் எரிச்சல், அனல் கக்குவது போன்ற உணர்வு, வயிற்றில் தோன்றும் வலி, வயிற்றுப் புண்ணுக்கும் உணவுக்கும் தொடர்பு, உணவிற்கும் வலிக்கும் உள்ள தொடர்புகளில் குடல்புண் வித்தி யாசப்படும், இரைப்பையில் புண்ணிருந்தால் உணவு சாப்பிட்டதும் வலி அதிகமாகும். இரைப்பையை அடுத்த டியோடினம் என்ற முன்குடலில் புண்ணி ருந்தால் உணவு சாப்பிட்டதும் வலி குறைந்துவிடும்.

உணவு முறைகள்:

1. திரவ உணவுகளான கஞ்சி, பால், குளிர்ந்த நீர், இளநீர், புளிப்பில்லாத பழரசம்.

2. ஹார்லிக்ஸ், நன்றாக வேக வைத்த சாதம், கஞ்சி, மோர்சாதம், இட்லி

3. கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் (நன்கு வேக வைத்தது)

4. புளிப்பில்லாத பழங்கள்: ஆப்பிள், வெள்ளரிப்பழம், முலாம் பழம்.

5. உணவு வேளைகளுக்கு இடையில் (பகல் 11 மணி மாலை 4 மணி) மேரி பிஸ்கட், இளநீர், பால், மோர், பாயாசம் போன்றவைகளைச் சாப்பிடலாம்.

நெஞ்சுகரிப்பு உள்ளவர்கள்:

1. இவர்களுக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி, வயிறு உப்புசம், நெஞ்சு கரிப்பு, புளிச்ச ஏப்பம், வாந்தி, இரத்த வாந்தி, கருப்பு நிறமாக மலம் கழித்தல், பசியின்மை, காரம் சாப்பிட்டால் எரிச்சல், நள்ளிரவுக்கு மேல் வயிற்று வலி மற்றும் பசிஉணர்வு போன்ற அறிகுறிகள் அதிக மாக இருக்கும்.

உணவுப்பாதை அசைவு பிரச்சனை நெஞ்சுரித்தரித் தலுக்கு மிகவும் முக்கிய காரணங்களாகும். இதனால் ஏப்பம், வயிறு நிறைந்த உணர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகும். உணவுக் குழாய்க்கு அடியிலுள்ள வால்வு/தசை பலவீனமுற்றிருக்கலாம் அல்லது சரியாக வேலை செய்யாதிருக்கலாம். அதனால் அமிலம் மற்றும் உணவுகளை உணவுப்பாதையின் மேல் நோக்கி எதிர்த்து வரும்.

படுக்கையின் தலைப்பாகத்தை உயர்த்தி வைக்கவும். இதனால் புவிமையம் உணவை கீழ்வயிற்றில் இருக்கச் செல்ல உதவும். அதிக எடையிருப்பின் எடையை குறைக்கவும். இது உணவுக் குழாயின் அடிப்பாகத்திலுள்ள தசை வலுவை மேம்படுத்த உதவும். சிலருக்கு உணவை வயிற்றினுள் அனுப்ப உணவுக் குழாய்க்கு சிரமமாய் இருக்கலாம். வயிற்றைக் காலி செய்ய வழக்கமான நேரத்தைவிட அதிக நேரம் எடுக்கலாம்.

மருந்து வகைகள்: ஆண்டாசிட், ரேனிடின், டாம் பெரிடோன், ஒமிபிரசோல், பிஸ்மத் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி பயன்படுத்தலாம். ஹெச்.பை லோரி கிருமிக்கு ஒருவார ஆண்டிபயாடிக் சிகிச்சை தேவை.

நன்றி: விடுதலை

Monday, November 10, 2008

இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி


Blood cleaning
தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். டயாலிசிஸ் கருவியைப் போன்றது இது. மெல்லிய இழைகளின் துணைகொண்டு இரத்தத்தில் உள்ள வைரஸ்களை இந்த கருவி வடிகட்டிவிடுகிறது. இரத்தக்குழாயில் இருந்து குழாய்வழியாக இரத்தம் இந்தக் கருவிக்குள் செல்கிறது. சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. எண்ணற்ற நோய்கள் இந்தக் கருவியினால் குணப்படுத்தப்படுகின்றன.

நாளொன்றுக்கு 14,000 பேர் எச்.ஐ.வி. வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தக் கருவியினால் எய்ட்ஸ் நோயாளிகளின் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, நீடித்த ஆயுளுக்கு வழிபிறந்துள்ளது. சாண்டிகோவின் யேத்லான் மருத்துவமனை தலைவர் ஜிம் ஜோய்ஸ் கூறும்போது இந்த கருவி ஒரு டயாலிசிஸ் கருவியைப்போல் செயல்படுவதாக கூறியுள்ளார்.

உடலில் உள்ள அனைத்து இரத்தமும் இந்தக் கருவியில் உள்ள பெட்டகத்தின் வழியாக எட்டு நிமிடத்திற்கொருமுறை செலுத்தப்படுகிறது. இரத்தத்தில் உள்ள அனைத்து வைரஸ்களும் சிலமணி நேரங்களுக்குள் நீக்கப்படுகின்றன. எச் ஐ வி, ஹெபடிடிஸ்-சி, தட்டம்மை, ஃப்ளூ ஆகிய வைரஸ்கள் எளிதில் நீக்கப்பட்டுவிடுகின்றன. பெரிய அளவிலான இந்தக் கருவியை மருத்துவமனையிலும், சிறிய அளவிலான கருவியை அவசரகால ஊர்திகளிலும் பயன்படுத்த முடியுமாம். தீவிரவாதிகளினால் ஏவப்படும் வைரஸ்களில் இருந்து உயிர்காக்கவும் கூட இந்தக் கருவி பயன்படுகிறது.

சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் செயற்கை சிறுநீரகம் வழியாக செலுத்தப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. டயாலிசிஸ் என்பது உயிரை தக்கவைப்பதற்கான சிகிச்சை மட்டும்தான். நோயில் இருந்து விடுதலை அளிப்பதற்கான சிகிச்சையல்ல. வலிநிறைந்ததும் செலவு பிடிப்பதுமான டயாலிசிஸ் சிகிச்சை இப்போது நிறைய பேருக்குத் தேவைப்படுகிறது. இரத்தம் சுத்தப்படுத்தும் கருவியும் டயாலிசிஸ் கருவியைப் போன்றது தான்.

அதிக செலவு பிடிப்பது. இனிமேல் பணக்காரர்களுக்கு வைரஸ்களிடமிருந்து விடுதலை.

http://www.sciencedaily.com/videos/2008/0602-cleaning_infected_blood.htm

http://www.keetru.com/medical/general/blood.php
மு.குருமூர்த்தி(cauverynagarwest@gmail.com)

தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார்-

விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் நம் மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் தியாகி சங்கரலிங்கனார்.

ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டார். தன்னுடைய சொத்துக்களை அருகிலுள்ள பள்ளிக்கு எழுதி வைத்து விட்டார். விருதுநகரில் ஒரு ஆசிரமத்தை அமைத்து தங்கியிருந்த போதுதான் ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 கோரிக்கைகளை முன்வைத்து 1956 ஜூலை 27 ல் தனியாளாக சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

காங்கிரஸ் அரசு அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. ம.பொ.சி., அண்ணா, காமராஜர், ஜீவா போன்றவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வலியுறுத்தினர். ஆனால் தன்னுடைய கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 10 ம் தேதி உயிர் துறந்தார்.

தொடர்ந்து அவரது கோரிக்கைக்காக பலரும் குரல் கொடுத்தனர். 1967 ஏப்ரம் 14 அன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு ஆக மாறியது. 1968 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

தாவரங்களைக் காக்கும் ஜீன்கள்- மு.குருமூர்த்தி

தாவரங்கள் அதிகமான வெப்பநிலையை எவ்வாறு சமாளிக்கின்றன?

இந்த கேள்விக்கான விடையை மிச்சிகன் பல்கலைக்கழக தாவர இயல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். ஜீன்களில் சிறைப்பட்டிருந்த இந்த ரகசியம் அண்மையில் விடுவிக்கப்பட்டிருக்கிறது. வெப்பமான உலர்ந்த காலநிலைகளில் தாவரங்களை வளர்த்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அறிய இந்த கண்டுபிடிப்பு நிச்சயம் உதவும்.

கடுகு குடும்பத்தைச்சேர்ந்த Arabidopsis thaliana தாவரத்தில் bZIP28 என்கிற ஜீன் வெப்பநிலைக்கு எதிர்வினையாற்றுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். தாவரங்கள் அதிகவெப்பநிலையை தாங்கும் தன்மை ஒரு சிக்கலான நடைமுறையாகும். தாவரங்களில் புரதங்களை உருவாக்கி, செல்லிற்குள் வேதிப்பொருள்களை கடத்தும் பணியை endoplasmic reticulum என்னும் பகுதி செய்கிறது. இந்த பகுதியில் இருந்து வெளிப்படும் சைகைகளுக்கு bZIP28 ஜீன்கள் எதிர்வினையாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு செல்லில் காணப்படும் உட்கருவே செல்லின் மூளை என்று இதுநாள்வரையில் கருதப்பட்டு வந்தது. ஆனால் bZIP28 போன்ற ஜீன்கள் மற்றசில ஜீன்களை தூண்டிவிட்டு இயங்கச் செய்யவும், இயங்காமல் இருக்கச் செய்யவும் ஆற்றல் பெற்றவையாக இருக்கின்றன. இந்த வகையான ஜீன்கள் விலங்கு செல்களில் மட்டும் இருப்பதாக இதுவரை அறியப்பட்டிருந்தது. ஆனால் இப்போதுதான் தாவர செல்களிலும் இந்த வகையான ஜீன்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரு தாவரம் அதிகவெப்பநிலையை எதிர்கொள்ளும்போது bZIP28 ஜீனின் ஒருமுனை துண்டிக்கப்படுகிறது. செல்லின் உட்கருவை நோக்கி நகரும் bZIP28 ஜீன், மற்ற ஜீன்களில் தூண்டுதலை ஏற்படுத்தி வெப்பநிலைக்கு எதிர்வினை செய்யுமாறு தூண்டிவிடுகின்றன.

அதே நேரத்தில் வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் அதிகமானால் bZIP28 ஜீன்கள் இறந்து போகின்றன.

இன்னும் படிக்க: "http://www.sciencedaily.com/releases/2008/10/081006180803.htm"

- மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)