Tuesday, September 2, 2008

தலைவலி - மரு. இரா.கவுதமன்

உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்-பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபுறமும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்தி-லிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும். ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும். ஒரு சிலருக்கோ எப்ப வரும்? எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்-கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்-கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.

நோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.

1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.

2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்-களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.

3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.

4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.

5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama - Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவ-தால் தலைவலி வரலாம்.

6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடைய-தால் தலைவலி உண்டாகும்.

7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்-பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்-படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலை-வலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.

9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்க-வாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.

10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.

மருத்துவர்கள் தலைவலியை வேறு வகை-யாக வகைப்படுத்துகின்றனர்.

1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache) 2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension) 3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation) 4. தசைச் சுருக்கம் (Muscle Spasm) 5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache) என மருத்துவர்கள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.

மேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.

மருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.

அதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்.

நன்றி:உண்மை

செயற்கை ரத்தம்: விஞ்ஞானிகள் சாதனை

பரிசோதனைக் கூடத்தில் செயற்கை ரத்தத்தை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
கருவை உருவாக்கும் (Emryonic) செல்களிலிருந்து சிவப்பணுக்களை உற்பத்தி செய்து அதன்மூலம் செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது.
இதற்கு முன்பும் பரிசோதனைக் கூடத்தில் செயற்கை ரத்தம் உருவாக்கப்பட்டது. ஆனால், அதில் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை. அந்த ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் இயற்கையான சிவப்பணுக்களைப்போல் செயல்படாமல் புற்றுநோய் செல்களாக மாறிவிட்டன.
ஆனால், தற்போது உருவாக்கப்பட்ட சிவப்பணுக்கள் மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைப் போல் செயல்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆராய்ச்சியை அமெரிக்கா - சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக் கழகமும் ரோசெஸ்டரில் உள்ள பயோ கிளினிக்கும் இணைந்து மேற்கொண்டன. மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைப் போல் செயற்கை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.
புதிய கண்டுபிடிப்பு மூலம் ரத்தச் சிவப்பணுக்களை பெருமளவில் தயாரிக்க முடியும். அவ்வாறு பெரும் அளவில் சிவப்பணுக்கள் தயாரிக்கப்படும்போது மனித ரத்தத்துக்கு பதில் செயற்கை ரத்தத்தைப் பயன்படுத்த முடியும்.
செயற்கை ரத்தம் பயன்பாட்டுக்கு வரும்போது ஏராளமான உயிர்களைக் காக்க முடியும். அதோடு ரத்ததானம் மூலம் சோதனை செய்யப்படாமல் செலுத்தப்படும். ரத்தம்மூலம் எச்.அய்.வி., மஞ்சள் காமாலை உருவாக்கும் ஹெப்படைட்டீஸ் பி கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. ஆனால், செயற்கை ரத்தம் மிகவும் சுத்தமானதாக இருக்கும்.

http://files.periyar.org.in/viduthalai/20080901/news16.html

சாதிக்காயின் மருத்துவக் குணங்கள்

சாதிக்காய் என்பதற்கு குலக்காய், ஜாதிக்காய் அட் டம், அட்டிகம் என்கின்ற வேறு பெயர்கள் இருக் கின்றன. சாதிக்காய்க்கு தாவ ரவியல் வழங்கும் பெயர் மைரிஸ்டிகா அஃபியனா லிஸ் அல்லது மைரிஸ்டிகா ஃப்ராக்ரன்ஸ் எனப்படும். இது ஒரு மர இனத்தை சேர்ந் தது. சாதிக்காய் பழத்தில் கொட்டையின் ஓட்டி னுள்ளே இருக்கும் பருப்பு தான் சாதிக்காய் என்று உபயோகிக்கப்படுகிறது. இதனை உணவு தயாரிப்பில் மணமூட்டும் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இதன் சுவை : துவர்ப்பு, தன்மை : வெப்பம்.

சாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற் கையான மருத்துவக் குணங் கள் உள்ளன.

சாதிக்காய் உடலை வலிமையாக்கும்.

வாயுவினால் வயிறு உப்பசம், வயிற்று வலி, வயிற் றுப் பொருமல், அசீரண மந்தம், வாந்தி பேதியின் போது அதிக தாகம், ஒற்றைத் தலைவலி, மூச்சு இரைப்பு, இருமல், கண் ஒளி மங்கல், தூக்கமின்மை.

பெண்களுக்கு : மாத விலக்கின் போது வயிற்று வலி. அதிக உதிரப்போக்கு.

ஆண்களுக்கு : விந்துக் குறைவை போக்குகிறது.

சாதிக்காய் எண் ணெய்(தைலம்), பல்வலி, வாத நோய் ஆகியவைகளுக்கு வெளி உபயோகத்திற்கு பயன்படுகிறது.

ஹோமியோபதி எனும் ஜெர்மனி மருத்துவத்தில் சாதிக்காயிலிருந்து வீரியப் படுத்தி (பொடன்சி) தயாரிக் கப்பட்ட மருந்தின் பெயர் நக்ஸ்மாஸ்சாடா எனப்படும் இம்மருந்து சில மன நோய்க் குறிகளுக்கும் சில நோய்களை குணப்படுத்த பயன்பட்டு வருகிறது.

மனக்குறிகள் : தோல்வியான சம்பவங்களாலும் அல்லது வேறு காரணங்களாலும் அதிக மன வேதனையால் மன நிலை பாதிப்பு (லிபோதை மியா).

நினைவாற்றல் குறை பாட்டிற்கு இரண்டு காரணங் கள் இருக்கின்றன.

1. புரதம், மாவு சர்க்கரைப் பொருள் அடங்கிய க்ளைகோ ப்ரோட்டீன் என்னும் சத்துப் பொருள் மூளையில் குறைந்து இருப்பது. அதாவது, இந்தச் சத்துப் பொருள் மூளையின் வெளிப்பகுதியில் (செரிப்ரல் கார்டெக்ஸ்), நரம்பு செல் களிலும் (நியூரான்), நரம்புகளிலும் நினைவுகளை அனுப்புவதில் ஊக்கமுடன் செயல்படச் செய்கிறது.

2. மூளையில் (தலைமிதழ்), ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்பிற்கு (ஆக்ஸான், டென்ட்ரான்) தகவல்கள் கடந்து செல்லும்போது (டிரான்ஸ்மிஷன்), இரண்டு நரம்புகளும் இணையும் இடத்தில் (சைனாப்ஸ்) நினைவுகளின் உணர்ச்சி வேகம் (இம்பல்ஸ்) தாமத மாக செயல்படுவதால் ஞாப கம் உடனே வருவதில்லை.

விபத்தினாலும் அல்லது சில மருந்து வகைகள் சாப்பிட்டதாலும், கண்களில் கருவிழிக்கு (அய்ரிஸ்) நடுவில் இருக்கும் கண்மணி (பியூபில்) என்னும் உறுப்பு, அதிக அளவில் விரிந்திருக்கும் கண் நோய், கண்மணியில் செயல் படும் தசைகள் (ஸ்பிங்டர் மஸில்) பாதிப்பினால் ஏற்படு கிறது. மேற்கண்ட இரண்டு பாதிப்புகளுக்கும் (ஞாபக மறதி, கண் நோய்) நக்ஸ் மாஸ்சாடா என்னும் மருந்து செயல்படுகிறது.

பெண்களுக்கு: சீரற்ற காலத்தில் கொஞ்சமாகவும், அதிகமாகவும் மாறுதலாக வெளியாகும் மாதவிடாய்ப் போக்கு, நீடித்திருக்கும் மாத விடாய் (மெனோஸ்டேக் ஸிஸ்) மாதவிடாய் வராத காலத்திலும் கருப்பையில் உதிரப்போக்கு, இரத்தமுடன் வெள்ளைப்படுதல் (லியு கோரியா).

இதர நோய்க்குறிகள் :

வாத நோயில், வலது இடுப்பிலிருந்து, வலது முழங்கால் மூட்டு வரை வலி, குறிப்பாக மாடியில் ஏறும் போது அதிக வலி, அசைவு களால் வலி அதிகம், நடப்ப தற்கு தடுமாறுதல் (ஸ்டேகர்).

தொண்டை வறட்சி, வயிற் றில் அதிகக் காற்று சேர்ந்து வயிறு உப்புசமாகவும், அசீர ணக் கோளாறும் (டிஸ் பெப்சியா) இருக்கும்.

தூக்கமின்மையால் சில நோய் பாதிப்புகள், தூங்கிய வாறு சோம்பி இருத்தல், உணர்வற்ற நிலையில் (கோமா/ஸ்டூபர்) இருத்தல்.

http://files.periyar.org.in/viduthalai/20080901/news18.html

'ஹெட்ஃபோனால் இதயநோய் ஏற்படும்

பொதுவாக தற்போது நாம் சாலைகளில் பல பேர் அவர்களாகவே பேசிக் கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். விவரம் புரியாத கிராமத்தினர் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, பாவம். பார்த்தா நல்ல அழகா இருக்காங்க. என்ன வியாதியோ, தன்னாலேயே பேசிக் கொண்டு செல்கிறார்கள் என்று நினைப்பார்கள்.

காதில் மாட்டிக்கொள்ளக் கூடிய போனை வைத்துக் கொண்டு, யாரிடமாவது பேசிக் கொண்டோ அல்லது எஃப்.எம். வானொலியில் ஏதாவது இசையை ரசித்துக் கொண்டோ நடந்து செல்வது தற்போது, பெரும்பாலானோருக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு ஃபேஷனாகி விட்டது.

ஆனால், இந்த ஹெட் ஃபோனால் என்னவெல்லாம் ஆபத்து இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்களா? அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் காது கேட்கும் திறன் மெதுவாகப் பாதிக்கப்படக் கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

காதில் போனை மாட்டிச் செல்லும் இந்தப் பழக்கத்தால் அதிக டென்ஷன் ஏற்படுவதுடன் இதய நோய் உருவாகக்கூடும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒலி அலைகளை உருவாக்கக்கூடிய உட்புற காதில் அடங்கிய ஸ்பைரல் கேவிட்டியான கோச்லியா ஹெட்ஃபோன் ஒலியை தாங்கக்கூடியதாகும். இந்த கோச்லியாவிற்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

கால் சென்டர்களில் பணியாற்றும் ஏராளமான ஊழியர்கள் தங்களின் கேட்கும் திறனில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்களை அணுகுவதாகவும், இதன்மூலம் உடல் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது.

ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது

http://files.periyar.org.in/viduthalai/20080901/news19.html

தெரியுமா?


  • பீட்ரூட்டில் உள்ள பேட்டின் என்ற பொருள் ஒரு சக்தி வாய்ந்த புற்று நோய்த் தடுப்பி.

  • பீட்ரூட்டில் உள்ள பேட்டின் இரத்த நாளக் கசிவு, இரத்தக் குழாய் அழற்சி, மஞ்சள்காமாலை, நரம்புத் தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்த சோகை மற்றும் மூட்டு வீக்கங்கள் வராமல் தடுக்க முடியும்.

  • ஓட்ய் தானிய உணவை சாப்பிட்டால் பருத்த உடலும் மாறி நேர்த்தியான உடலைப் பெறலாம்.

  • முந்திரிப்பருப்பை அதிகமாக சாப்பிட்டால் அசீரணம் ஏற்படும்.

  • மனித உடலில் மூன்று ட்ரிலியன் அணுக்கள் உள்ளன. (1000000000000000000).

  • தயிரை உணவில் கடைசியாக சேர்த்துக் கொள்வதற்கு காரணம், தயிரில் சாப்பிட்ட பிறகு திருப்தியை தரக்கூடிய கொலிஸிஸ்டோகினைன்கள் என்ற நொதிப்பி உள்ளது.

  • மனிதர்களில் 98.5 விழுக்காடு ஒரே மாதிரியான மரபணுக்கள் உள்ளன.

http://files.periyar.org.in/viduthalai/20080901/news19.html