Tuesday, July 29, 2008

உலக தினங்களின் பட்டியல்..

பிப்ரவரி 14, காதலர் தினம்
‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்
மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்
ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்
மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்
ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்
செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்
நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்
டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

 நன்றி: http://www.orkut.com/CommTopics.aspx?cmm=25343398

Monday, July 21, 2008

உடல் அறிவோம்-உணவு மண்டலம்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
என்பது வள்ளுவர் வாக்கு, பகுத்துண்டு என்ற சொல்லுக்கு இரு அர்த்தம் உண்டு. பகிர்ந்து உண்ணுதல் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எது நம் உடலுக்கு ஏற்ற உணவு என்பதை அறிந்து உண்பது மற்றொன்று. உணவு சுவைமிகுந்து இருந்தால் மட்டும் போதாது. சத்தானதாக இருக்க வேண்டும். சத்தான உணவே நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.

உணவில் உள்ள சிக்கலான, கரையாத, பெரிய மூலக்கூறுகள் எளிமையான, கரையும் சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் செயலே செரிமானம் ஆகும். இனி நம் உணவு மண்டலத்தைப் பற்றி பார்ப்போம். இது வாயில் துவங்கி மலத்துளையில் முடிவடைகிறது. நாம் உணவை வாயில் மூலம் உட்கொள்கிறோம். வாயில் உள்ள நாக்கு சுவை அறியவும், பற்கள் உணவை சிறு சிறு துண்டு களாக வெட்டவும் பயனாகின்றன. புழு பூச்சி களுக்கு கூட பல் இல்லாவிட்டாலும் அதன் வேலையைச் செய்ய ஒரு ஜோடி மேன்டிபிள் என்ற உறுப்பால் உணவைத் துண்டாக்குகின்றன. யானைக்கு இருக்கும் தந்ததும் அதன் முன் வெட்டுப்பல்தான். நாய்க்கு 42ம், எலிக்கு 16ம் மனிதனுக்கு 32 பற்களும் உள்ளன. வெற்றிப் பாக்கு, புகையிலை, சிகரெட் போன்ற பழக்கம் உடையவர்களுக்கு பற்களில் கறை ஏற்பட்டு சொத்தைப் பல்லாகிறது. சாப்பிடும்போது நம் பற்களைப் பயன்படுத்தி உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் வாய் கொப்பளிப்பதும் அவசியம். பல் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்கள் மூலம் பல நோய்கள் வர வாய்ப்புண்டு. எனவே தினமும் இருமுறை பல் துலக்கினால் 80 வயதானாலும் ஒரு பல்கூட விழாது.

சாதாரணமாக முதுகெலும்புகள்ள பிராணிகளுக்கு 4 ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் காணப்படும். ஆனால் மனிதனுக்கு 3 ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகளே உள்ளன. 1 ஜோடி பரோடிட் சுரப்பிகள். கன்னத்திலும், 1 ஜோடி சப்மேன்டிபுலார் சுரப்பிகள் தாடைக்கு கீழும், 1 ஜோடி சப் லிங்குவல் சுரப்பிகள் நாக்கின் கீழும் காணப் படுகின்றன. பரோடிட் சுரப்பியில் உள்ள சிரஸ் செல்கள் டயலின் என்ஸைமைச் சுரக்கின்றன. இவை பாக்டீரியாவை அழிக்க வல்லன. வைரஸ்களால் இச்சுரப்பிகள் பாதிக்கப்படும் போது கன்னப் பகுதி வீங்கி, அம்மை நோய் ஏற்படுகிறது.

தினமும் 1 முதல் 1.5 லிட்டர் உமிழ்நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. வாயை ஈரப்பதமுள்ளதாக்குவதற்கும் தாகத்தைக் குறைக்கவும், வெப்பமான பொருட்களை குளிராக்கவும் உமிழ்நீர் பயனாகிறது.

நாக்கில் உள்ள சுமார் 3000 சுவை அரும்புகள் மூலம் உணவின் சுவை அறிகிறோம். அமீபாவுக்கு இவை உடல் முழுவதும், ஹைடிராவுக்கு அதன் உணர் கொம்புகளிலும், மீன், தவளைக்கு தோல் முழுவதும், பட்டாம் பூச்சி, தேனீ மற்றும் ஈக்களுக்கு கால் நுனியிலும் சுவை அரும்புகள் உள்ளன. நாவின் கீழே உள்ளது. தொண்டைப் பகுதி, உணவை உணவுக் குழாய்க்கும், காற்றை குரல் வளைக்கும் அனுப்புவது இதன் வேலையாகும். நாம் தலைகீழாக இருந்து கொண்டு சாப்பிட்டாலும் உணவு வயிற்றுக்கு வந்துவிடுவது உணவுக் குழாயின் தசை இயக்கத்தினாலே தான். இத்தசைகளின் அசைவினாலேயே உணவு இரைப்பையை அடைகிறது. இரைப்பையில் உணவு சுமார் 3 மணி நேரம் தங்கியிருக்கும். இது ஒரு ஜெ (J) வடிவ உறுப்பாகும். இரைப்பை, இரைப்பை நீரைச் சுரக்கிறது. மேலும் இரைப்பையில் சுமார் 3 கோடியே 50 இலட்சம் இரைப்பைச் சுருப்பிகள் உள்ளன. இச்சுரப்பிகளில் உள்ள சிப் (Chief Cells) செல்கள் பெப்சின், ரெனின் மற்றும் ஜெலாட்டி னேஸ் ஆகிய என்சைம்களைச் சுரக்கின்றன. ஆக்சிண்டிக் செல்கள் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. இரைப்பை நீரில் 99.45 சதவிகிதம் நீரும் 0.4 - 0.5 சதவிகிதம் இவ்வமிலமும் உள்ளன. நம் உணவில் உள்ள பாக்டீரியங்களை ஹைட்ரோ குளோரிக் அமிலம் அழித்து உணவு நச்சாவதைத் தடுக்கிறது. இரைப்பையில் சுமார் 1.5 முதல் 2 லிட்டர் இரைப்பை நீர் தினமும் சுரக்கிறது. சரியான நேரத்திற்கு நிண்ட நாட்கள் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களில் குடல் சுவர் அமிலத்தால் பாதிக்கப்படுகிறது. எனவே, வாய், தொண்டை, உணவுக் குழாய், இரைப் பையில், புண் உண்டாகிறது. இதுவே அல்சர் என அழைக்கப்படுகிறது. நேரத்திற்கு சாப்பிட்டால் அல்சர் வராது.
உணவுப் பாதையில் கணையம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புக்கள் சுரக்கும் பொருட்களும் உணவைச் செரிக்க உதவுகின்றன. கல்லீரல் பித்த நீரைச் சுரக்கிறது. பித்த நீரில் உள்ள பித்த உப்புக்கள் கொழுப்பை சிறுசிறு துகள்களாக மாற்றுகின்றன. பித்த நீரை உற்பத்தி செய்யும் செல்களுக்கு பேரன்கைமா செல்கள் என்று பெயர். இவை பித்தப்பையில் சேமித்து வைக்கப்படுகின்றன. தினசரி 500 மிலி முதல் ஒரு லிட்டர் வரை பித்த நீர் உற்பத்தி யாகிறது.

கணையம், கணைய நீரைச் சுரக்கிறது. தினமும் சுமார் ஒரு லீட்டர் கணைய நீர் நம் உடலில் உருவாகிறது. வாகஸ் நரம்பும், பேன்கிரியோசைனின் செக்ரீடின் போன்ற ஹார்மோன்களும் கணைநீர் உற்பத்தியை சீராக்குகின்றன. கணைய நீர் கொழுப்பு துகள்களை திரவ நிலைக்கு மாற்றுகிறது. மேலும் இதில் உள்ள 5 வகையான என்சைம் களும் உணவைச் செரிக்க உதவுகின்றன.
இரைப்பையிலிருந்து உணவு, சிறுகுடலை அடைந்து சுமார் 10 மணி நேரம் இங்கு தங்குகிறது. சிறு குடலிலும் 6 வகையான நொதிகள் சுரக்கின்றன. சிறு குடலின் முன் பகுதியில் உணவுச் செரிமானம் முற்றுப் பெறுகிறது. பின் பகுதியில் உள்ள சுமார் 50 லட்சம் குடல் உறிஞ்சிகள் செரிக்கப்பட்ட உணவை உறிஞ்சி இரத்தக் குழாய்களுக்கு அனுப்பும். சிறுகுடல் பெருங்குடலுடன் இணையும் இடத்தில் உள்ள வேலையற்ற சிறு புழுபோன்ற அமைப்பு குடல் வால் என அழைக்கப்படுகிறது. உணவில் உள்ள தலை முடி, மற்றும் முள், நார் ஆகிய பொருட்கள் ஏதேனும் இப்பகுதியில் சிக்கிக் கொண்டால் அப்பகுதி புண்ணாகி வீக்கம் ஏற்படுகிறது. இது சிலருக்கு பெரிதாகி சிறுகுடலையே பாதிக்கும் அளவுக்கு ஆபத்தாக முடிகிறது. இதனையே அப்பெண்டிசிடிஸ் என அழைக்கிறார்கள்.
பெருங்குடலில் வேலை செரிக்கப்படாத உணவில் உள்ள நீரை உறிஞ்சுவதே ஆகும். பெருங்குடலின் பிற்பகுதியில் உள்ள மலக் குடலின் தசை இயக்கத்தினால் செரிக்கப்படாத உணவு மலமாக, வெளியேறுகிறது. மலம் மஞ்சள் நிறமுள்ளது. பித்த கிறுமிகள் உடலில் உள்ள உணவில் கலப்பதே மலம் மஞ்சளாக மாறக் காரணமாகும்.
மலத்தின் கெட்ட வாசனைக்கு இதில் உள்ள இண்டோல் மற்றும் ஹைடிரஜன் சல் படு போன்ற வேதிப் பொருட்களே காரணம். சாதாரண மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 75 முதல் 170 கிராம் மலத்தை வெளியேற்று கிறான். மலம் 70 முதல் 75 சதவிகிதம் நீராலும் எஞ்சிய திடப்பொருட்களாலும் ஆனது.

http://www.viduthalai.com/periyarpinju/200805/page07.html

உக்ரைன்- வை.கலை

உக்ரைன் நாடு அய்ரோப்பா கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் கீவ்.

இந்நாட்டின் பரப்பளவு 6,03,100 சதுர கிலோ மீட்டர்.

போலந்து, ரோமானியா, ரஷ்யா ஆகிய நாடுகளையும், கருங்கடலையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது.

இது சமவெளிகளையும், கார்பாத்திய மலைத் தொடர்களையும் முக்கிய இயற்கையமைப்புகளாகக் கொண்டுள்ளது.

பக், நீப்பர், டெனட்ஸ், நீஸ்ட்டர் ஆகியவை இந்நாட்டின் முக்கிய ஆறுகளாகும்.

குளிர்கால கோதுமை மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை இந்நாட்டில் அதிகம் விளையும் வேளாண் பொருள்களாகும்.

இரும்புத்தாது நிலக்கரி, மாங்கனீசு, இயற்கை எரிவாயு, எண்ணெய்ப் பொருட்கள், உப்பு, கந்தகம், கிராபைட், நிக்கல், பாதரசம் ஆகியவை இங்கு கிடைக்கும் முக்கிய உலோகத் தாதுப் பொருட்கள்.

மக்கள் தொகை:
2006 ஜூலை கணக்கெடுப்பின்படி இந்நாட்டு மக்கள் தொகை 4,67,10,816 பேர்.

கல்வியறிவு: 99.7 சதவிகிதம் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

உக்ரைனிய மொழி அலுவலக மொழியாக உள்ளது. ஆனால் ரஷ்ய, ருமேனிய, போலிஷ் மற்றும் ஹங்கேரி மொழிகள் பேசப்படுகின்றன.

கிறித்துவம், இஸ்லாம், யூதம் ஆகிய மதங்கள் பின்பற்றப்படுகின்றன.

பொருளாதாரம்:
ரிவ்ணியா என்பது உக்ரைன் நாட்டின் நாணயமாகும்.
இந்நாட்டில் 29 விழுக்காடு மக்கள் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர்.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கணக்கெடுப்பின்படி 9 விழுக்காட்டினர் வேலை வாய்ப்பற்றவர்கள்.

சேவைகள்:
இந்நாட்டில் 22,473 கி. மீட்டர் நீள இருப்புப் பாதைகளும் 1,69,679 கி.மீ. சாலைகளும் உள்ளன.
1,08,33,300 தொலைப் பேசிகள் இயங்குகின்றன.
சுமார் 50 லட்சம் பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.
3.8 மில்லியன் பேர் இணைய தள வசதிகளைப் பயன்படுத்துகின்றனர்.

அரசு முறை:
இது ஒரு குடியரசு நாடாகும். குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும், பிரதம அமைச்சர் அரசின் தலைவராகவும் உள்ளன.
ஆகஸ்ட் - 24 சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. (1991இல் சோவியத் யூனியனிலிருந்து விடுதலை பெற்றது).
தற்போதைய குடியரசுத் தலைவர் விக்டர் யூச்சென்கோ.
- தற்போதைய பிரதமர் யூரி யெகன்னுரோவ்.

வரலாற்றுச் சுவடுகள்:
-கி.மு. ஆயிரம் ஆண்டுகளில் இந்நாடு, சுமேரியர்கள் மற்றும் சைதியான் இனத்தவர்களால் படையெடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
-கி.பி. ஆயிரம் ஆண்டுகள் வரை ஹூணர்கள், பல்கர்கள் கசார்கர்கள் ஆகியோரால் ஆளப்பட்டது.
-நான்காம் நூற்றாண்டில் ஸ்லோவிக் பழங்குடியினர் குடியேறினர்.
-1240இல் மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டது.
-பின்னர் போலந்து நாட்டின் கட்டுப்பாட்டில் வந்தது.
-18ஆம் நூற்றாண்டில் இரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
-1918இல் ரஷ்யாவிடமிருந்து விடுதலை பெற்று மீண்டும் 1919இல் இரஷ்யாவால் கைப்பற்றப் பட்டது.
-1923இல் சோசலிஸ்ட் குடியரசானது.
-1986இல் செர்னோபில் என்னுமிடத்தில் பெரிய அணுஉலை விபத்து நடந்தது.
-1991இல் சுதந்திரம் பெற்றது.


http://www.viduthalai.com/periyarpinju/200806/page09.html

உருகுவே- வை.கலை


  • தென் அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
  • இதன் தலைநகரம் மாண்டி வீடியோ
  • பரப்பளவு 68,037 சதுரை மைல் (1,76,215 ச.கி.மீ.)
  • 2006 கணக்கெடுப்புப்படி மக்கள் தொகை 34,31,932 பேர்
  • 66 சதவிகிதம் பேர் ரோமன் கத்தோலிக்கர்கள்.
    மொழி - ஸ்பானிஷ்
  • மொத்த மக்கள் தொகை 98 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.
    ம் சராசரி வாழ்நாள் 76 ஆண்டுகள்.

அரசு முறை:

  • இது அரசமைப்பைக் கொண்ட குடியரசு நாடாகும்.
  • 1925 ஆகஸ்ட் 25-இல் பிரேசில் நாட்டிலிருந்து விடுதலை பெற்றது.
  • நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் குடியரசுத் தலைவர் உள்ளார்.
    பொருளாதாரம்
  • இந்நாட்டின் நாணயம் உருக்கு வேயன் பீசோ.
    போக்குவரத்து மற்றும் சேவைகள்:
  • ரயில்வே: 2,073 கி.மீ.
  • சாலைகள்: 77,732 கி.மீ
  • தொலைபேசிகள்: 1 மில்லியன்
  • செல்பேசிகள்: 70,2000 பேர்

வரலாற்று சுவடுகள்

  • 1516 ஆம் ஆண்டுக்கு முன் இந்நாட்டில் சாருவா இந்தியர்கள் என்னும் இனத்தவர் அதிகமாக குடியிருந்தனர்.
  • பின்னர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் குடியேறினர்
  • 1680-இல் போர்ச்சுகீசியர் வந்து குடியேறினர்
  • 1726-ல் ஸ்பானியர்கள் போர்ச்சுகீசிய குடியேற்றத்தை வீழ்த்தி மான்டி வீடியோவை உருவாக்கினர்.
  • 1811 ஸ்பெயினிடமிருந்து போர்ச்சுகீசியர் கைப்பற்றி பிரேசிலுடன் இணைத்தனர்.
  • 1825 இல் பிரேசிலுக்கு எதிராக கிளர்ச்சி எழுந்து 1928-ல் விடுதலை பெற்றது.
  • இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட கச்சா பொருள்களின் தேவையால் உருகுவே பொருளாதாரத்தில் பெரிய

வெற்றிப் பெற்றது.

  • 1951 குடியரசு தலைவர் பதவி ஒழிக்கப்பட்டு நிருவாக மய்யம் உருவானது.
  • 1966-இல் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு மீண்டும் குடியரசுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.
  • 1975-இல் இராணுவப் புரட்சி ஏற்பட்டது
  • 1986-இல் மீண்டும் மக்களாட்சி உருவாக்கப்பட்டது.
  • 1990 முதல் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

இந்நாட்டின் முக்கிய பொருளாதாரங்கள்

  • சுற்றுலா, மீன்பிடி தொழில், துணி உற்பத்தி, வேதிப் பொருட்கள் உற்பத்தி போன்றவை முக்கியத் தொழில்களாகும்.
  • நாட்டின் அய்ந்தில் நான்கு பங்கு மேய்ச்சல் நிலமாக உள்ளதால் ஆடு, மாடு போன்ற கால் நடைகளிலிருந்து கிடைக்கும் மாமிசம், தோல் மற்றும் பால் போன்றவை முக்கிய வருவாய்களாகும்.
  • முக்கிய உணவுப் பண்டங்கள் - கோதுமை, ஓட்ஸ், சோளம் மற்றும் பார்லி.

  • http://www.viduthalai.com/periyarpinju/200807/page07.html