Tuesday, November 11, 2008

குடல் புண்

நுண்கிருமி வயிற்றுப் புண் ணுக்கான முக்கிய காரணம். இது அசுத்த உணவு களால் பரவவது.

பொறாமை, விரக்தி, வெறுப்பு, குற்ற உணர்வு, தனிமை உணர்வு, ஆவேசம், பதட்டம் போன்ற உணர்வுகள் குடல் புண்ணை அதிகரிக்கின்றன.

மன அழுத்தத்தின்போது இரைப்பையில் அதிகமான அமிலம் சுரக்கிறது. அதனால் குடல்புண் பெரிதாகிறது அல்லது தாமதமாக குணமாகிறது.

குடல் புண்ணால் பாதிக்கப்படுபவர்களின் உற வினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இரண்டு மடங்கு கூடுதலாக குடல் புண்ணுக்கு ஆளாகிறார்கள்.

குடல்புண் ஒரு குண்டூசியின் தலை அளவிலிருந்து இரண்டரை செ.மீ. விட்டம் கொண்ட அளவு வரை தோன் றும். இவை பெரிதாக இருந்தால், இரைப் பையில் அடைப்பு ஏற்படும்பொழுது உணவு வயிற்றுக்குக் கீழே செல்லாது.

இப்புண் இரைப் பையை துளைத்தோ அல்லது முன்சிறுகடல் பகுதியைத் துளைத்தோ ஓட்டையை ஏற்படுத் தும். இதற்கு உடனே அறுவை சிகிச்சை தேவை.

குறிப்பாக தொடர்ந்து மது அருந்துவதோ, வலி மாத்திரை, மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை சாப் பிடுவோருக்கு இப்பிரச்சினை அதிகமாக ஏற்படும்.

வயிற்றுப்புண் சில சமயங்களில் புற்றுநோயாக மாறுவதுண்டு. இதைத் தொடக்கத்திலேயே கண் டறிந்து அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

அறிகுறிகள்:

நெஞ்சில் எரிச்சல், அனல் கக்குவது போன்ற உணர்வு, வயிற்றில் தோன்றும் வலி, வயிற்றுப் புண்ணுக்கும் உணவுக்கும் தொடர்பு, உணவிற்கும் வலிக்கும் உள்ள தொடர்புகளில் குடல்புண் வித்தி யாசப்படும், இரைப்பையில் புண்ணிருந்தால் உணவு சாப்பிட்டதும் வலி அதிகமாகும். இரைப்பையை அடுத்த டியோடினம் என்ற முன்குடலில் புண்ணி ருந்தால் உணவு சாப்பிட்டதும் வலி குறைந்துவிடும்.

உணவு முறைகள்:

1. திரவ உணவுகளான கஞ்சி, பால், குளிர்ந்த நீர், இளநீர், புளிப்பில்லாத பழரசம்.

2. ஹார்லிக்ஸ், நன்றாக வேக வைத்த சாதம், கஞ்சி, மோர்சாதம், இட்லி

3. கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் (நன்கு வேக வைத்தது)

4. புளிப்பில்லாத பழங்கள்: ஆப்பிள், வெள்ளரிப்பழம், முலாம் பழம்.

5. உணவு வேளைகளுக்கு இடையில் (பகல் 11 மணி மாலை 4 மணி) மேரி பிஸ்கட், இளநீர், பால், மோர், பாயாசம் போன்றவைகளைச் சாப்பிடலாம்.

நெஞ்சுகரிப்பு உள்ளவர்கள்:

1. இவர்களுக்கு வயிற்றின் மேல்பகுதியில் வலி, வயிறு உப்புசம், நெஞ்சு கரிப்பு, புளிச்ச ஏப்பம், வாந்தி, இரத்த வாந்தி, கருப்பு நிறமாக மலம் கழித்தல், பசியின்மை, காரம் சாப்பிட்டால் எரிச்சல், நள்ளிரவுக்கு மேல் வயிற்று வலி மற்றும் பசிஉணர்வு போன்ற அறிகுறிகள் அதிக மாக இருக்கும்.

உணவுப்பாதை அசைவு பிரச்சனை நெஞ்சுரித்தரித் தலுக்கு மிகவும் முக்கிய காரணங்களாகும். இதனால் ஏப்பம், வயிறு நிறைந்த உணர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகும். உணவுக் குழாய்க்கு அடியிலுள்ள வால்வு/தசை பலவீனமுற்றிருக்கலாம் அல்லது சரியாக வேலை செய்யாதிருக்கலாம். அதனால் அமிலம் மற்றும் உணவுகளை உணவுப்பாதையின் மேல் நோக்கி எதிர்த்து வரும்.

படுக்கையின் தலைப்பாகத்தை உயர்த்தி வைக்கவும். இதனால் புவிமையம் உணவை கீழ்வயிற்றில் இருக்கச் செல்ல உதவும். அதிக எடையிருப்பின் எடையை குறைக்கவும். இது உணவுக் குழாயின் அடிப்பாகத்திலுள்ள தசை வலுவை மேம்படுத்த உதவும். சிலருக்கு உணவை வயிற்றினுள் அனுப்ப உணவுக் குழாய்க்கு சிரமமாய் இருக்கலாம். வயிற்றைக் காலி செய்ய வழக்கமான நேரத்தைவிட அதிக நேரம் எடுக்கலாம்.

மருந்து வகைகள்: ஆண்டாசிட், ரேனிடின், டாம் பெரிடோன், ஒமிபிரசோல், பிஸ்மத் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி பயன்படுத்தலாம். ஹெச்.பை லோரி கிருமிக்கு ஒருவார ஆண்டிபயாடிக் சிகிச்சை தேவை.

நன்றி: விடுதலை

0 கருத்துரைகள்: