Tuesday, January 27, 2009

செயற்கை மனிதன் - த.க.பாலகிருட்டினன்

மனிதர்கள் பலருக்கும் பல்வேறு காரணங்-களால் செயற்கை உறுப்புகள் பொருத்தப்-படுகின்றன. எடுத்துக் காட்டாக விபத்தில் கால்களை இழந்தவருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் அவற்றை அவர்கள் மிகுந்த உடல் முயற்சியினால்தான் இயக்க இயல்கிறது. ஆனால், தற்போது கண்டு-பிடிக்கப்பட்டுள்ள கருவியை மூளையில் பொருத்தி விட்டால், அது மூலையில் எழும் எண்ண ஓட்டங்களை மின்காந்த அலைகளாக மாற்றி செயற்கை உறுப்புகளுக்கு அனுப்பி அவற்றை மூளையின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப செயல்பட வைக்கிறது.

ஒரு நெருப்புக் குச்சியின் தலை அளவே உள்ள இந்தக் கருவியில் மிகவும் வலிமை வாய்ந்த டங்ஸ்டன் கார்பைடால் செய்யப்-பட்ட 100 சென்சார்கள் அடங்கியுள்ளன. இந்த சென்சார்கள் மயிரிழையை விடச் சிறிதளவே பெரியதாக இருக்கும். மூளையில் அமைக்கப்-படும் இந்த சென்சார்கள் மூளையின் எண்ண ஓட்டத்தைப் பெற்று அவற்றை செயற்கை உறுப்புகளுக்கு அனுப்புகின்றன. இதன் மூலம் கால்களை இழந்தவர்கள் தங்களுக்குப் பொருத்தப் பட்டுள்ள செயற்கைக் கால்களை இவ்வாறு இயங்கச் செய்து தாங்கள் இழந்-திருந்த நடமாடும் ஆற்றலைத் திரும்பப் பெற இயலும் என அறிவியலாளர்கள் எதிர்பார்க்-கின்றனர். இங்கிலாந்தின் கார்டிஃப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள மைக்ரோபிரிட்ஜ் சர்வீசஸ் என்னும் நிறுவனம் ஆய்வு செய்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது. மைக்ரோ பொறியியல் வடிவமைப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் இது ஒன்றினால் மட்டுமே இத்தகைய மூளையில் பொருத்தப்-படும் கருவியைச் செய்ய இயலும் என்று கருதப்படுகிறது.

இது போன்று நீண்ட காலம் பயன்பட இயன்ற புதிய புதிய மைக்ரோ நீடில் சென்-சார்களை உருவாக்க வேண்டும் என்று கார்டிஃப் பல்கலைக் கழகம் அமைத்திருக்கும் இந்த நிறுவனத்தை உடா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டுள்-ளனர். சிலிகானுக்குப் பதிலாக டங்ஸ்டன் கார்பைடைப் பயன்படுத்தி இத்தகைய கருவிகளை உருவாக்கும் தமது நிறுவனத்தின் ஆற்றல் ஒன்றே மிகவும் இன்றியமையாதது என்று அந்த நிறுவனத்தின் டாக்டர் ராபர்ட் ஹொய்லி கூறுகிறார். மிகவும் உறுதி வாய்ந்த உலோகத்தைப் பயன்படுத்தலாம் என் அவர்களின் தேர்வே சரியானது என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

மூளையில் இருந்து கிடைக்கும் எலக்ட்ரிக் சிக்னல்களை இக்கருவி அடையாளம் கண்டு வாங்கி, அவற்றை அவை உருப்பெருக்கி, செயற்கை உறுப்புகளை இயங்கச் செய்வதற்-காக அவற்றை அனுப்புகிறது என்று ஹொய்லி தெளிவுபடுத்தினார். இத்தகைய கருவி மூளை-யில் பொருத்தப்பட்டவுடன், இதன் மூலம் சரியான பயனை அடைய சரியாக சிந்திக்க நோயாளி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கான பயிற்சி பெற பல வார காலம் ஆகும் என்றாலும், தாமாக பரிசோதனைக்கு முன்வந்த நோயாளிகளிடம் இக்கருவி பயன்-படுத்தப்-பட்ட போது நம்பிக்கை தரும் விதத்தில் அவற்றின் செயல்பாடுகள் இருந்தன. ஒரு செயற்கை மனிதன் என்று மக்கள் அழைப்பதாகவே இதன் பயன் இருக்கும் என நான் கருகிறேன் என்று ஹொய்லி கூறினார் என்று டெலிகிராஃப் இதழ் தெரிவிக்கிறது.

விபத்துகளில் முதுகுத் தண்டு செயலிழந்து போகும் நோயாளிகளுக்கு எதிர்காலத்தில் இந்தத் தொழில் நுட்பம் பெரு-மளவுக்கு உதவக்-கூடும். காயம் அல்லது சேதத்தைச் சரி செய்யும் விதத்-தில் இக் கருவி முதுகுத் தண்டின் மீது பொருத்தப்பட்டு, எவ்வாறு இயங்குவது என்பதை மறுபடியும் கற்றுக் கொள்ள அனுமதிக்கிறது.

http://files.periyar.org.in/unmaionline/2009/january/01-15_2009/page17.php?0945-560_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_0000-1100_01-15_2009

எஸ்தோனியா - வை.கலை

அமைவிடம்:

* வடகிழக்கு அய்ரோப்பாவில் அமைந்துள்ளது.
* இரஷ்யா மற்றும் பின்லாந்து வளைகுடா பால்டிக் கடல் போன்றவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
* முக்கிய நிலப்பரப்பையும் பால்டிக் கடலில் 1500 தீவுகளையும் உள்ளடக்கியது.
* மொத்த பரப்பளவு 45,226 சதுர கி.மீ.,
* மக்கள் தொகை, 13,24,333 பேர்.
* எஸ்டோனியன் மொழி அலுவலக மொழியாக உள்ளது. இது தவிர இரஷ்யன் மொழியும், உக்ரைன் மொழியும் பேசப்படுகின்றன.

பொருளாதாரமும் சேவை பண்புகளும்:

* 99.8 விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். (ஆண்கள் 99.8, பெண்கள் 99.8).
* சராசரி வாழ்நாள் 72.04 ஆண்டுகள்.
* நாணயம் குரூன்.
* முக்கிய ஏற்றுமதி பொருட்கள்: எந்திரப் பொருள்கள், மரக்கட்டைகள், துணிகள், உணவுப் பொருள்கள். அரசு முறை

* தலைநகர் டாலின் (Tallinn)
* பாராளுமன்ற குடியரசு நாடாகும். நாட்டின் தலைவராக அதிபரும், அரசின் தலைவராக பிரதமரும் உள்ளனர்.
* இந்நாடு சோவியத் யூனியனிடமிருந்து 1991 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-இல் பிரிந்தது.
* அதிபர் அர்னால்ட் ரூடல். பிரதமர் ஆன்ரூஸ் அன்ஷிப்.

வரலாற்று சுவடுகள்

* 1526-இல் எஸ்தோனியா ஸ்வீடன் நாட்டின் கட்டுப்பாட்டில் வந்தது.
* 1721-இல் ஸ்வீடனிலிருந்து சோவியத் ரஷ்யா கைப்பற்றியது.
* 1918-ல் எஸ்தோனியா சுதந்திரத்தை பிரகடன படுத்தியது.
* 1940-இல் மீண்டும் சோவியத் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.
* 1991 - ஆகஸ்டில் தனி நாடானது.
* 2004-இல் அய்ரோப்பிய யூனியனி லும், நேட்டோ அமைப்பிலும் இணைந்தது.

http://periyarpinju.com/200812/page04.php

பழங்கால மனிதரின் காலடித் தடங்கள் கண்டுபிடிப்பு

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரோக்க மோன்பியா என்றும் எரிமலையின் உச்சியில் 385,000 மற்றும் 325,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனிதரின் காலடித் தடங்களை கண்ட அறிவியலாளர்கள் இவை தான் மிகவும் பழமையான மனிதக் காலடித் தடங்கள் என்று உறுதிப் படுத்தியுள்ளார்கள்.

இந்த எரிமலையின் உச்சியில் கெட்டிப் பட்டுப் போன எரிமலைச் சாம்பலின் மீது இக் காலடிகளை பவோடா பல்கலைக் கழகத்தி லிருந்து 2003 ஆம் ஆண்டில் சென்ற ஒரு குழுவினர் கண்டனர். அக் காலடித் தடங்கள் 385,000 ஆண்டுகளிலிருந்து 325,000 ஆண்டு கள் முந்தையவையாக இருக்கக்கூடும் என்று அப்போது மதிப்பிடப்பட்டது.

எரிமலையின் மேலிருந்து கீழே இறங்கி வந்த மூன்று பழங்கால மனிதர்களின் இக்காலடித் தடங்கள் சரியாக எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதை தற்போது ஒரு பிரஞ்சுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது பற்றி நியூ சயின்ஸ் இதழில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

தட்பவெப்பம் மற்றும் சுற்றுச் சூழல் அறிவியல் சோதனை சாலையின் அறிவியலார் கள் ஸ்டீபன் ஸ்கெயிலட் தலைமையில் இக்காலடித் தடங்களின் காலத்தைக் கண்டறிய ஆர்கனைப் பயன்படுத்தினர்.

இக்காலடித் தடங்களை முதன் முதலாகக் கண்டு உலகிற்கு அறிவித்த இத்தாலியக் குழுவைச் சேர்ந்த பாலோ மியட்டோ என்பவர், இதுவரை காணப்பட்ட மனிதக் காலடித் தடங்களிலேயே இதுதான் மிகவும் பழமை யானது என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ள இக் காலடித் தளங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கூறுகிறார். இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் இக் காலடித் தடங்கள் ஹோமோ ஹெய்டல்பெர்கென்சிஸ் மக்களு டையவை என்று தெரிய வருவதாக அவர் கூறுகிறார்.

அந்த இடத்திலிருந்து மூன்று கி.மீ. தள்ளி ஒரு இரண்டாவது ஆய்வு இடத் தைத் தோண்டி ஆராய்ச்சி செய்ய இத்தாலியக் குழு முடிவு செய்துள்ளது. பழங்கால மனிதர்கள் உபயோகித்த பாதையைக் கண்டு பிடிக்க இந்தப் புதிய அகழாய்வு பயன்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

காலடித் தடங்களின் தன்மையைக் காணும்போது அவர்கள் நடந்துதான் சென்றிருக்க வேண்டும், ஓடியிருக்க முடியாது என்று மியட்டோ கூறுகிறார். இந்த காலடித் தடங்கள் இரண்டு திசை களிலும் காணப்படுகின்றன. எனவே எரிமலை வெடித்ததால் அவர்கள் ஓடிச் சென்றிருக்க முடியாது; எரிமலை வெடித்ததற்குப் பிந்தைய காலத்தில் அத்தடங்கள் பதிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

"பூமி மற்றும் கோள்கள் அறிவியல் கடிதங்கள்" என்னும் பத்திரிகையில் இக் கண்டுபிடிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

-இளங்கண்ணன்

பழங்கால மனிதரின் காலடித் தடங்கள் கண்டுபிடிப்பு

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரோக்க மோன்பியா என்றும் எரிமலையின் உச்சியில் 385,000 மற்றும் 325,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனிதரின் காலடித் தடங்களை கண்ட அறிவியலாளர்கள் இவை தான் மிகவும் பழமையான மனிதக் காலடித் தடங்கள் என்று உறுதிப் படுத்தியுள்ளார்கள்.

இந்த எரிமலையின் உச்சியில் கெட்டிப் பட்டுப் போன எரிமலைச் சாம்பலின் மீது இக் காலடிகளை பவோடா பல்கலைக் கழகத்தி லிருந்து 2003 ஆம் ஆண்டில் சென்ற ஒரு குழுவினர் கண்டனர். அக் காலடித் தடங்கள் 385,000 ஆண்டுகளிலிருந்து 325,000 ஆண்டு கள் முந்தையவையாக இருக்கக்கூடும் என்று அப்போது மதிப்பிடப்பட்டது.

எரிமலையின் மேலிருந்து கீழே இறங்கி வந்த மூன்று பழங்கால மனிதர்களின் இக்காலடித் தடங்கள் சரியாக எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதை தற்போது ஒரு பிரஞ்சுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது பற்றி நியூ சயின்ஸ் இதழில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

தட்பவெப்பம் மற்றும் சுற்றுச் சூழல் அறிவியல் சோதனை சாலையின் அறிவியலார் கள் ஸ்டீபன் ஸ்கெயிலட் தலைமையில் இக்காலடித் தடங்களின் காலத்தைக் கண்டறிய ஆர்கனைப் பயன்படுத்தினர்.

இக்காலடித் தடங்களை முதன் முதலாகக் கண்டு உலகிற்கு அறிவித்த இத்தாலியக் குழுவைச் சேர்ந்த பாலோ மியட்டோ என்பவர், இதுவரை காணப்பட்ட மனிதக் காலடித் தடங்களிலேயே இதுதான் மிகவும் பழமை யானது என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ள இக் காலடித் தளங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கூறுகிறார். இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலம் இக் காலடித் தடங்கள் ஹோமோ ஹெய்டல்பெர்கென்சிஸ் மக்களு டையவை என்று தெரிய வருவதாக அவர் கூறுகிறார்.

அந்த இடத்திலிருந்து மூன்று கி.மீ. தள்ளி ஒரு இரண்டாவது ஆய்வு இடத் தைத் தோண்டி ஆராய்ச்சி செய்ய இத்தாலியக் குழு முடிவு செய்துள்ளது. பழங்கால மனிதர்கள் உபயோகித்த பாதையைக் கண்டு பிடிக்க இந்தப் புதிய அகழாய்வு பயன்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

காலடித் தடங்களின் தன்மையைக் காணும்போது அவர்கள் நடந்துதான் சென்றிருக்க வேண்டும், ஓடியிருக்க முடியாது என்று மியட்டோ கூறுகிறார். இந்த காலடித் தடங்கள் இரண்டு திசை களிலும் காணப்படுகின்றன. எனவே எரிமலை வெடித்ததால் அவர்கள் ஓடிச் சென்றிருக்க முடியாது; எரிமலை வெடித்ததற்குப் பிந்தைய காலத்தில் அத்தடங்கள் பதிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

"பூமி மற்றும் கோள்கள் அறிவியல் கடிதங்கள்" என்னும் பத்திரிகையில் இக் கண்டுபிடிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

-இளங்கண்ணன்

எலும்புகள்-மு.குருமூர்த்தி


man_bones நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச்சட்டம் என்று பெயர்.

bones_ உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச்சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர்.

bones மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.

அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன.

தகவல்: மு.குருமூர்த்தி

- மு.குருமூர்த்தி (http://www.sciencedaily.com/releases/2008/11/081126133409.htm)

http://www.keetru.com/science/environment/Gurumoorthy_10.php

Monday, January 12, 2009

பெண் பூப்பெய்ததாக விழா கொண்டாடும் மானங்கெட்டவர்களே இதை கொஞ்சம் படியுங்கள்

நமக்கு வருகின்ற அழைப்புகளில் பெரும்-பாலும், உறவினர் வீட்டுத் திருமணங்களின் அழைப்பிதழாக இருக்கும். அதற்கடுத்து, பூப்புனித நன்னீராட்டு விழா அழைப்-பிதழ்களாகத்தான் இருக்கும். போக்குவரத்து வசதிகள் இல்லாத காலக்கட்டத்தில் தோன்றிய ஒரு அநாகரிகமான விழாவாகவே இதை சொன்னாலும் குற்றமில்லை. வசதி வாய்ப்-புக்கள் குறைந்திருந்த காலக் கட்டத்தில் என் மகள் பருவமடைந்து விட்டாள், திருமணத்-திற்குத் தயார் எனும் விளம்பரப்படுத்தும், ஒரு விழாவாகவே செய்யப்பட்ட ஒரு குடும்ப விழா இது. காலங்கள் மாறி, அறிவியல் ஆட்சி செலுத்தும் இன்றைய காலக் கட்டத்திலும் இவ்விழா கொண்டாடப்படுவதென்பது மகளிரை இழிவு செய்யும் நிகழ்வேயாகும். இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு-கூட பெண் பருவமடைந்து விட்டால், பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். வாசலில் நிற்க விடமாட்டார்கள். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்காலத்தில் சொந்த வீட்டிலேயே, ஒரு பாயும், அலுமினியத் தட்டும் கொடுத்து, மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். அவர்களை யாரும் தொடக் கூடாது. அவர்களும் யாரையும் தொடக் கூடாது என்ற ஒருவகை தீண்டாமை!

சற்றேறத்தாழ சொந்த வீட்டிலேயே ஒரு பிச்சைக்காரியைப் போல பெண்கள் நடத்தப்-படும் நிலையெல்லாம் இருந்தது. ஏறக்குறைய வீட்டையே பெண்ணுக்கு, சிறையாக மாற்றி விடும் அவல நிலையெல்லாம் இருந்தது. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தான் இவ்வளவு அவல நிலையும் ஒழிந்து, பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். ஆணுக்கும், பெண்ணுக்-கும் உடல் ரீதியாக ஒரு சில வித்தியாசங்கள் தவிர, வேறு வேறுபாடு இல்லை என பெரியார் முழங்கினார். அதன் விளை-வையன்றோ இன்று மகளிர் அறுவடை செய்து வருகின்றனர். இயல்பாக நிகழும் இந்தப் பருவமடைதலையும், மாதவிலக்கையும் பற்றிப் பார்ப்போம்.

பெண்கள் பிறக்கும் பொழுதே சினை முட்டைகளை உருவாக்கும் கருப்பையுடனும், கர்ப்பப்பையுடனும் தான் பிறக்கின்றனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பை (Ovaries) செயல்படாமல் இருக்கும். 11 வயதிலிருந்து 15 வயதிற்குள் பெண் பருவடை-கிறாள். மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி (Pitutary) நாளமில்லா சுரப்பி-களிலிருந்து சுரக்கும் கருப்பை தூண்டும் சுரப்பு (Follicular Stimulating Hormone) கள் சுரந்து கருப்பையில் உள்ள சினை முட்டையின் (Ovum) வளர்ச்சியைத் தூண்டுகிறது. இந்தச் சுரப்பு, பெண்களுக்கு எட்டாவது வயதிலேயே சுரக்கத் துவங்கினாலும் ஏறக்குறைய இரண்டு மூன்று ஆண்டுகளில் தான் கருப்பையில் உள்ள சினை முட்டை வளர்ச்சி தூண்டப்படுகிறது. அடிப்படையில் சினை முட்டை வளர்ச்சி-யடைந்த நிலையில் உள்ள பொழுது, ஆண் உற்பத்தி அணு (Sperm) இணைந்தால், கருத்தறித்தல் நிகழ்ந்துவிடும். பெண் கருத்-தறிக்கும் இந்த நிலையில், கருத்தரித்தல் நிகழாவிட்டால் இரத்தப் போக்கு ஏற்படும். முதல் முதல் ஏற்படும் இந்த இரத்தப் போக்-கையே பெண் பருவமடைந்ததாக குறிப்-பிடுகிறோம்.

ஆண் கருவோடு சேர்ந்து கருவுறும் சினை முட்டை, கருக்குழாயிலிருந்து (Fellopian Tubes) கர்ப்பப்பைக்கு வரும். அங்கு கர்ப்பப்பையின் உட்சுவரில் பதிந்து, மெதுவாகக் குழந்தையாக வளரத்துவங்கும் அப்படி கருவுறுதல் நிகழா-விடில் கர்ப்பப் பையிலிருந்து இரத்தப் போக்கு ஏற்படும். இதையே மாத விலக்கு என்கிறோம். கருப்பைத் தூண்டும் சுரப்பு, கருப்பையை தூண்டுகிறது. கருப்பையில் ஈஸ்ட்ரஜன், புரொஜெஸ்ட்ரான் (Oestrogen, Progestron) என்ற சுரப்புகள் சுரக்கின்றன. இவை கரு முட்டையின் வளர்ச்சிக்குக் காரணமாகின்றன.

சாதாரணமாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் மாதவிலக்கு சுழற்சி, சிலருக்கு 30 நாட்கள், 35 நாட்கள் என்றுகூட நிகழும். 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி, மாத விலக்கின் முதல் நாளிலிருந்து கணக்-கிடப்படும். மாத விலக்கு சுழற்சியின் முதல் நாளிலிருந்து கருப்பையில் மாற்றங்கள் நிகழும். கருப்பப்பையின் உட்சுவரின் (Endometrium) செல்கள் சிதிலமடைவதால் உதிரப் போக்கு ஏற்படும். கருப்பப்பை சுருங்கும். ஏற்பட்ட உதிரப்போக்கு வெளியேறும். கர்ப்பப்பை சுருங்குவதால்தான், சில பெண்களுக்கு மாத-விலக்கின் போது வயிறு வலி உண்டாகிறது. மாத விலக்கு சாதாரணமாக 3 முதல் 5 நாட்களுக்கு நீடிக்கும். மாத விலக்கு முடிந்த நாளிலிருந்தே கருப்பப்பை அடுத்த சுழற்சிக்கு தயாராகும். கருப்பையில் (Ovaries) சினை முட்டை வளரும். பருவமடையும் பொழுது 3,00,000 முதல் 4,00,000 கருப்பைகளும், முட்டைகளும் இருந்தாலும், மாதம் ஒரு முட்டை தான் வளர்ச்சியுற்று, கருப்பையை கிழித்துக் கொண்டு, கருக்குழாயை அடையும். அதே நேரத்தில் கருவைத் தாங்கும் நிலையை கருப்பப்பையின் உட்சுவர் அடையும். கருப்பப்-பையின் உட்சுவரின் செல்கள் வளர்ந்து கருப்பப்-பையின் உட்சுவர் கெட்டிப்படும். ஒரு வேளை ஆண் அணுவோடு சேர்ந்து கருத்தரித்-தால் கருவுற்ற சினைமுட்டை கருப்பைக்கு வந்து, கருப்பையின் உட்சுவரில் பதியும் வண்ணம், உட்சுவர் வளர்ச்சியடையும். சாதாரண நிலையில் மாதவிலக்கு ஏற்பட்டு 14-ஆம் நாள் சினை முட்டை முழு வளர்ச்சி அடைந்து கருக்குழாயை அடையும். அந்த நேரத்தில் உடல் உறவு ஏற்பட்டால் கருவுறுதல் நிகழ்ந்து விடும். கரு முட்டையின் வாழ்க்கை 12 மணி நேரம்தான். ஆனால் விந்தில் இருக்கும் ஆண் கருவின் வாழ்க்கை 24 முதல் 48 மணி வரை. அதனால் தான் மாதவிலக்கு நிகழ்ந்து 10 முதல் 20 நாள் வரை உடலுறவு கொள்ளும்-பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கருவுறும் வாய்ப்புகள் அதிகம். மருத்துவர்கள் மாதவிலக்கு துவங்கிய நாளை ஒன்றாம் நாளாக கணக்கிட்டு, மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து, பத்தாம் நாள் வரையிலும், மீண்டும் இருபது முதல் இருபத்து எட்டாம் நாள் வரையிலும், பாதுகாப்பான நாட்களாக (Safe Perios) கூறுவர். பத்து முதல் இருபது நாட்களை கருவுறும் நாட்களாக (Risk Period) கணக்கிடுவர்.

கருவுறும் திறனையடைந்தும், முழுமையான வளர்ச்சியடைந்தும் உள்ள கருமுட்டையில், கருவுறும் தேவை நிகழாவிட்டால்,கரு சிதையத் தொடங்கும். கருவுறாத முட்டை, கருப்பையில் ஒட்டாது. அதனால் முதல் 14 நாட்களில் கருவைத் தாங்கும். வளர்ச்சியுற்ற கருப்பையின் உட்சுவர் சிதைந்து, பழைய நிலையை அடையும். இந்த சிதைந்த நிலை 14 நாட்களில் முற்று பெற்று, சிதைவடைந்த கருப்பையின் உட்சுவரிலிருந்து இரத்தப் போக்கு ஏற்படும். இதுதான் மாதவிலக்கு.

சாதாரணமான, இயல்பான ஒரு நிகழ்வு இது. சிறுநீர் கழிப்பது போல், மலம் கழிப்பது-போல், கரியமில வாயுவை (ஊடிசடி - னு- டீஒனைந) வெளியேற்றுவதுபோல் ஒரு நிகழ்வுதான். கரியமில வாயுவை, நம் நுரையீரல் நிமிடத்திற்கு இருபது முறை வெளியேற்றுகிறது. பெருங்-குடல் மலத்தை ஒரு நாளைக்கு, ஓரிரு முறை வெளியேற்றுகிறது. சிறுநீரகம், சிறுநீரை ஒரு நாளைக்கு, 4,5 முறை வெளியேற்றுகிறது. கருப்பை சிதைவுற்ற செல்களை மாதத்திற்கு ஒரு முறை இரத்தப் போக்காக வெளியேற்று-கிறது. மற்றதற்கெல்லாம் நாம் என்ன விழாவா கொண்டாடுகிறோம். பருவமடையும் நிகழ்வு-க்கு மட்டும் எதற்கு இவ்வளவு பெரிய ஆர்ப்-பாட்டம்? பெண்மையை இழிவுபடுத்தும் இந்த விழாவை பெண்களே அதிக ஆர்வத்துடன் முன் நின்று நடத்துவதுதான் மிக மிகக் கேவலமாகத் தெரிகிறது. இனியாவது இது-போன்ற பெண்களைக் கொச்சைப்படுத்தும், பெண்களைக் கேவலப்படுத்தும் இவ்விழா-வினைத் தவிர்ப்போம்! தடுப்போம்!

டிசம்பர் 16-31 2008 உண்மை இதழ்