Tuesday, January 27, 2009

செயற்கை மனிதன் - த.க.பாலகிருட்டினன்

மனிதர்கள் பலருக்கும் பல்வேறு காரணங்-களால் செயற்கை உறுப்புகள் பொருத்தப்-படுகின்றன. எடுத்துக் காட்டாக விபத்தில் கால்களை இழந்தவருக்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்படுகின்றன. ஆனால் அவற்றை அவர்கள் மிகுந்த உடல் முயற்சியினால்தான் இயக்க இயல்கிறது. ஆனால், தற்போது கண்டு-பிடிக்கப்பட்டுள்ள கருவியை மூளையில் பொருத்தி விட்டால், அது மூலையில் எழும் எண்ண ஓட்டங்களை மின்காந்த அலைகளாக மாற்றி செயற்கை உறுப்புகளுக்கு அனுப்பி அவற்றை மூளையின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப செயல்பட வைக்கிறது.

ஒரு நெருப்புக் குச்சியின் தலை அளவே உள்ள இந்தக் கருவியில் மிகவும் வலிமை வாய்ந்த டங்ஸ்டன் கார்பைடால் செய்யப்-பட்ட 100 சென்சார்கள் அடங்கியுள்ளன. இந்த சென்சார்கள் மயிரிழையை விடச் சிறிதளவே பெரியதாக இருக்கும். மூளையில் அமைக்கப்-படும் இந்த சென்சார்கள் மூளையின் எண்ண ஓட்டத்தைப் பெற்று அவற்றை செயற்கை உறுப்புகளுக்கு அனுப்புகின்றன. இதன் மூலம் கால்களை இழந்தவர்கள் தங்களுக்குப் பொருத்தப் பட்டுள்ள செயற்கைக் கால்களை இவ்வாறு இயங்கச் செய்து தாங்கள் இழந்-திருந்த நடமாடும் ஆற்றலைத் திரும்பப் பெற இயலும் என அறிவியலாளர்கள் எதிர்பார்க்-கின்றனர். இங்கிலாந்தின் கார்டிஃப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள மைக்ரோபிரிட்ஜ் சர்வீசஸ் என்னும் நிறுவனம் ஆய்வு செய்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளது. மைக்ரோ பொறியியல் வடிவமைப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் இது ஒன்றினால் மட்டுமே இத்தகைய மூளையில் பொருத்தப்-படும் கருவியைச் செய்ய இயலும் என்று கருதப்படுகிறது.

இது போன்று நீண்ட காலம் பயன்பட இயன்ற புதிய புதிய மைக்ரோ நீடில் சென்-சார்களை உருவாக்க வேண்டும் என்று கார்டிஃப் பல்கலைக் கழகம் அமைத்திருக்கும் இந்த நிறுவனத்தை உடா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டுள்-ளனர். சிலிகானுக்குப் பதிலாக டங்ஸ்டன் கார்பைடைப் பயன்படுத்தி இத்தகைய கருவிகளை உருவாக்கும் தமது நிறுவனத்தின் ஆற்றல் ஒன்றே மிகவும் இன்றியமையாதது என்று அந்த நிறுவனத்தின் டாக்டர் ராபர்ட் ஹொய்லி கூறுகிறார். மிகவும் உறுதி வாய்ந்த உலோகத்தைப் பயன்படுத்தலாம் என் அவர்களின் தேர்வே சரியானது என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

மூளையில் இருந்து கிடைக்கும் எலக்ட்ரிக் சிக்னல்களை இக்கருவி அடையாளம் கண்டு வாங்கி, அவற்றை அவை உருப்பெருக்கி, செயற்கை உறுப்புகளை இயங்கச் செய்வதற்-காக அவற்றை அனுப்புகிறது என்று ஹொய்லி தெளிவுபடுத்தினார். இத்தகைய கருவி மூளை-யில் பொருத்தப்பட்டவுடன், இதன் மூலம் சரியான பயனை அடைய சரியாக சிந்திக்க நோயாளி கற்றுக் கொள்ள வேண்டும்.

இதற்கான பயிற்சி பெற பல வார காலம் ஆகும் என்றாலும், தாமாக பரிசோதனைக்கு முன்வந்த நோயாளிகளிடம் இக்கருவி பயன்-படுத்தப்-பட்ட போது நம்பிக்கை தரும் விதத்தில் அவற்றின் செயல்பாடுகள் இருந்தன. ஒரு செயற்கை மனிதன் என்று மக்கள் அழைப்பதாகவே இதன் பயன் இருக்கும் என நான் கருகிறேன் என்று ஹொய்லி கூறினார் என்று டெலிகிராஃப் இதழ் தெரிவிக்கிறது.

விபத்துகளில் முதுகுத் தண்டு செயலிழந்து போகும் நோயாளிகளுக்கு எதிர்காலத்தில் இந்தத் தொழில் நுட்பம் பெரு-மளவுக்கு உதவக்-கூடும். காயம் அல்லது சேதத்தைச் சரி செய்யும் விதத்-தில் இக் கருவி முதுகுத் தண்டின் மீது பொருத்தப்பட்டு, எவ்வாறு இயங்குவது என்பதை மறுபடியும் கற்றுக் கொள்ள அனுமதிக்கிறது.

http://files.periyar.org.in/unmaionline/2009/january/01-15_2009/page17.php?0945-560_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_0000-1100_01-15_2009

2 கருத்துரைகள்:

நற்கீரன் said...

உங்களின் பங்களிப்பை கட்டற்ற தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

http://ta.wikipedia.org/

நற்கீரன் said...

ta.wikipedia.org/wiki/பகுத்தறிவு