Tuesday, February 10, 2009

செவித்திறன் பரிசோதனை


தமிழ்நாடு டவுன்ஸ் சின்ட்ரோம் சங்கத்தில் பதிவு செய்துள்ள 4,000-த்துக்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் செவித் திறனை இலவசமாகப் பரிசோதனை செய்யும் திட்டத்தை சென்னை காது - மூக்கு தொண்டை மருத்துவமனையின் பேச்சு - கேள்வி இயல் பயிற்சி மய்யம் செயல்படுத்தி வருகிறது.

சென்னை மந்தைவெளியில் உள்ள இந்தப் பயிற்சி மய்யத்தில் (தொ.பே. எண்: 24939143) இந்தப் பரிசோதனைத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

குழந்தை பிறந்து வளரும் நிலையில் பேச்சு வருவதற்கு செவித்திறன் நன்றாக இருப்பது அவசியம். செவித்திறனை முன்கூட்டியே பரி சோதனை செய்து, குறை இருந்தால் சிகிச்சை அளித்துச் சரி செய்துவிட வேண்டும். இவ்வாறு செய்யும் நிலையில் குழந்தையின் தகவல் - தொடர்புத் திறன் பாதுகாக்கப்படும். இது வரை 300-க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் செவித் திறன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய திட்டத்தை நாட்டிலேயே முதல் அமைப்பாக சென்னை காது - மூக்கு - தொண்டை மருத்துவமனை செயல் படுத்தி வருகிறது - என்றார் அதன் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடன், அதன் செவித் திறனை இலவசமாக பரிசோதனை செய்யும் திட்டத்தை யும் சென்னை காது - மூக்கு - தொண்டை மருத்துவமனை அண் மையில் தொடங்கியுள்ளது. ரோட்டரி சங்கத்தின் - சைலண்ட் மெலடி சாரிட்டபிள் டிரஸ்ட்- ன் உதவியுடன் இத்திட்டத்தை அது செயல்படுத்தி வருகிறது.

2 கருத்துரைகள்:

Ungalranga said...

ஐ...
நல்ல தகவல்...
நன்றி...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்