Tuesday, September 2, 2008

செயற்கை ரத்தம்: விஞ்ஞானிகள் சாதனை

பரிசோதனைக் கூடத்தில் செயற்கை ரத்தத்தை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
கருவை உருவாக்கும் (Emryonic) செல்களிலிருந்து சிவப்பணுக்களை உற்பத்தி செய்து அதன்மூலம் செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது.
இதற்கு முன்பும் பரிசோதனைக் கூடத்தில் செயற்கை ரத்தம் உருவாக்கப்பட்டது. ஆனால், அதில் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை. அந்த ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் இயற்கையான சிவப்பணுக்களைப்போல் செயல்படாமல் புற்றுநோய் செல்களாக மாறிவிட்டன.
ஆனால், தற்போது உருவாக்கப்பட்ட சிவப்பணுக்கள் மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைப் போல் செயல்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆராய்ச்சியை அமெரிக்கா - சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக் கழகமும் ரோசெஸ்டரில் உள்ள பயோ கிளினிக்கும் இணைந்து மேற்கொண்டன. மனித ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைப் போல் செயற்கை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.
புதிய கண்டுபிடிப்பு மூலம் ரத்தச் சிவப்பணுக்களை பெருமளவில் தயாரிக்க முடியும். அவ்வாறு பெரும் அளவில் சிவப்பணுக்கள் தயாரிக்கப்படும்போது மனித ரத்தத்துக்கு பதில் செயற்கை ரத்தத்தைப் பயன்படுத்த முடியும்.
செயற்கை ரத்தம் பயன்பாட்டுக்கு வரும்போது ஏராளமான உயிர்களைக் காக்க முடியும். அதோடு ரத்ததானம் மூலம் சோதனை செய்யப்படாமல் செலுத்தப்படும். ரத்தம்மூலம் எச்.அய்.வி., மஞ்சள் காமாலை உருவாக்கும் ஹெப்படைட்டீஸ் பி கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. ஆனால், செயற்கை ரத்தம் மிகவும் சுத்தமானதாக இருக்கும்.

http://files.periyar.org.in/viduthalai/20080901/news16.html

0 கருத்துரைகள்: